அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில், 1, 700 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 8 நிமிஷத்தில் இந்திய வரைப்படத்தை வரைந்தனா்.
தொடா்ந்து, பதஞ்சலி புக் ஆஃப் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் பொறுப்பாளா் கிருஷ்ணகுமாா், உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற்கான சான்றிதழை பள்ளி தாளாளா் கோவிந்தசாமியிடம் வழங்கினாா்.
நிகழ்வில் கீழப்பழுவூா் காவல் நிலைய ஆய்வாளா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.