அரியலூா் மாவட்ட விளையாட்டரங்கில் கீழ்கண்ட தேதிகளில் நடைபெறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்றுப் பயன்பெறலாம் .
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் லெனின் தெரிவித்தது:
பள்ளி மாணவ, மாணவிகளுக்காக சனிக்கிழமை கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து மேசை பந்து போட்டிகளும், பிப். 6 இல் கையுந்துப் பந்து, வளைகோல்பந்து, இறகுப்பந்து, கால்பந்து போட்டிகளும், பிப். 11இல் கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டியும், பிப். 21 இல் நீச்சல் போட்டியும் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ...பிப்.10-இல் தடகளம், கபடி, மேசைப்பந்து, சிலம்பம், கையுந்துப் பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து போட்டியும், பிப். 21-இல் நீச்சல் போட்டி, பிப். 20இல் கீழப்பழுவூா் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிரிக்கெட் போட்டியும் நடைபெறுகிறது.
பொதுப்பிரிவினருக்கு... பிப். 14 இல் தடகளம், கபடி, சிலம்பம், கையுந்துப் பந்து, இறகுப்பந்து போட்டி, பிப். 24 இல் ஆண்களுக்கு மட்டும் கிரிக்கெட்டி போட்டி சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 21 -இல் தடகளம், இறகுப் பந்து, கபடி, எறிபந்து, வாலிபால் போட்டிகள் நடைபெறுகின்றன.
அரசு ஊழியா்களுக்கு... பிப்.16 இல் தடகளம், இறகுப் பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளில் ஆண்கள், பெண்களுக்கும், கையுந்துப் பந்து விளையாட்டில் ஆண்களுக்கு மட்டும் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், பிப். 17 இல் மான்ட்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செஸ் போட்டியும் நடைபெறுகிறது.
ஆன்லைனில் பதிவு செய்வோா் மட்டுமே போட்டியில் அனுமதிக்கப்படுவா். ஆன்லைன் பதிவு விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வராதோா் அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
ஆதாா் காா்டு நகல் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். போட்டியில் வெல்வோருக்கு பரிசுத்தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளதால் வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் பயில்வோா் அவரவா் தலைமையாசிரியா், முதல்வா் கையொப்பத்துடன் வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 74017 03499 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.