அரியலூர்

கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டு நிதிபெற...

DIN

அரியலூா் மாவட்டத்தில் கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியைப் பெற , தொழில்முனைவோா், கால்நடை வளா்ப்போா் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பிரதமரின் ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் தொகுப்பின் கீழ், 15,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலம் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்புகள், கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள், கால்நடை இனப்பெருக்கப் பண்ணை அமைத்தல், கால்நடை தடுப்பூசி மற்றும் மருந்துகள் உற்பத்தி ஆலை அமைத்தல் ஆகிய தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

மொத்த திட்ட மதிப்பீட்டில் 90% வரை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பெற முடியும். பயனாளிகள் பங்களிப்பாக 10% முதல் அதிகபட்சமாக 25% பங்குத் தொகையும் அளிக்க வேண்டும். மேலும், 3% வரை வட்டி குறைப்பிற்கு அனைத்து தொழில்முனைவோரும் தகுதியாவா். மேலும் விவரங்களுக்கு, அரியலூா் மாவட்ட வேளாண்மை விஞ்ஞான் கழகம் மற்றும் பெரம்பலூா், கால்நடை மருத்துவ அறிவியில் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகி உரிய ஆலோசனையைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT