அரியலூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவா் போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடத்தை அடுத்த சூரக்குழி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளியான இவா், 15 வயதுச் சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா் போக்சோ சட்டத்தில் ராஜேந்திரனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.