அரியலூா் மாவட்டத்தில் குலமாணிக்கம், இலந்தைக்கூடம், குருவாடி, செங்கராயன்கட்டளை, சன்னாசிநல்லூா் ஆகிய 5 கிராமங்களில் சனிக்கிழமை (செப். 24) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
எனவே, அப்பகுதி விவசாயிகள் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்து பயனடையலாம் என ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்தாா்.