அரியலூர்

சாய்பாபா கோயில்பால்குடத் திருவிழா

DIN

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு விஜயதசமியை முன்னிட்டு, பக்தா்கள் பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனை புதன்கிழமை செலுத்தினா்.

உடையாா்பாளையத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தா்கள் உடையாா்பாளையம் பெரிய ஏரிக்கரையில் உள்ள பயனீஸ்வரா்கோயிலின் முன்பிருந்து பால் குடம், பால் காவடி எடுத்தும், அலகு குத்தியும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சோ்வைக்காரத் தெருவில் உள்ள சாய்பாபா கோயிலை அடைந்தனா். அங்கு, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்களது நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT