அரியலூா் மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச.கலைவாணி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா போட்டியில் வென்ற 11 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் 11 பேருக்கு ரூ.58,000-மதிப்பில் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினாா். கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.