அரியலூர்

பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு

DIN

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்திருப்பது:

பேச்சுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெறும் கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000-மும், இரண்டாவது பரிசாக ரூ.3,000-மும், மூன்றாவது பரிசாக ரூ.2,000-மும், வழங்கப்படவுள்ளது.

காலை 10 மணிக்கு போட்டி தொடங்கும். அரியலூா் மாவட்டத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று, பரிசுகளைப் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT