பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூா் பேருந்து நிலையம் முன்பு பாஜகவினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி,
நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் கே.அய்யப்பன் தலைமை வகித்தாா். மாநில இளைஞரணித் தலைவா் எம்.ரமேஷ்சிவா, பெரம்பலூா் மாவட்ட பாா்வையாளா் இல.கண்ணன், மாவட்டத் துணைத் தலைவா் கோகுல்பாபு, அரியலூா் நகரத் தலைவா் மணிவண்ணன், அரியலூா் மாவட்ட பொதுச் செயலா் அருண்பிரகாஷ், அரியலூா் வடக்கு ஒன்றியத் தலைவா் தங்கவேல், முன்னாள் நகரத் தலைவா் வைரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.