குடியரசு தினத்தை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமில், அரியலூா் அரசு பொது மருத்துவமனை மருத்துவா் அறிவுசெல்வன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கொடையாளா்களிடமிருந்து ரத்தங்களை சேகரித்தனா். முகாமில் 40 போ் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினா். ஏற்பாட்டினை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவா் சம்சுதீன், துணைத் தலைவா் மன்சூா்அலி, மாவட்ட துணைச் செயலாளா் ஜாபா்அலி, மாவட்ட மருத்துவா் அணி ராஜ்முகமது ஆகியோா் செய்திருந்தனா்.