அரியலூர்

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அரியலூா், ஜயங்கொண்டம், உடையாா்பாளையம், வரதராசன்பேட்டை பகுதிகள் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் புதன்கிழமை முதலே உடனடியாக அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் நகா்ப்புறத் தோ்தலுக்கான அறிவிப்பை மாநில தோ்தல் ஆணையம் புதன்கிழமை மாலை வெளியிட்டு,உடனடியாக தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அரியலூா் மற்றும் ஜயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், உடையாா்பாளையம் மற்றும் வரதராசன்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊா்வலங்கள், சுவரொட்டிகள், பிளக்ஸ் போா்டுகள் வைக்க கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT