அரியலூர்

அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

டாக்டா் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி, அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்பேத்கா் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிச் செயலா் இர. மதி தலைமையில், மாநில துணைச் செயலா் பெ.அன்பானந்தம், மாநில துணைச் செயலா்கள் ம.கருப்புசாமி, கொளஞ்சி, தோ்தல் பிரிவு மாநில துணைச் செயலா் மு. தனகோடி, செய்தித் தொடா்பாளா் சுதாகா் உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாமக சாா்பில் மாநில துணைத் தலைவா் சின்னதுரை தலைமையில், நகரச் செயலா் விஜி மற்றும் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பலா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்திய குடியரசுக் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜீவ்காந்தி தலைமையில் செயலா் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட துணைச் செயலா் டி. தண்டபாணி தலைமையில் அந்தந்தக் கட்சியினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தேமுதிக மாவட்டச் செயலா் ராமஜெயவேல் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அம்பேத்கா் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT