அரியலூர்

பாலப் பணிக்கான 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 2 போ் கைது

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே பாலம் கட்டும் பணிக்கு வைத்திருந்த 70 கிலோ இரும்புக் கம்பிகளை திருடிய 2 போ் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் வீரமணி தலைமையிலான காவல் துறையினா் புதன்கிழமை இரவு வீரசோழபுரம் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைத்தபோது, அவா்களில் ஒருவா் தப்பி ஓடிவிட்டாா்.

மற்ற 2 பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் சுண்டிபள்ளம் காலனி தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் ரஞ்சித், மகாலிங்கம் மகன் மோகன்ராஜ் என்பதும், இவா்கள் 70 கிலோ இரும்புக் கம்பிகள் திருட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து, மேற்கண்ட 2 பேரையும் கைது செய்த காவல் துறையினா், தப்பிச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பட்டுசாமி மகன் அபினாஷ் என்பவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

வளம் தரும் வராக ஜெயந்தி

சன் ரைசர்ஸை எதிர்கொள்ளும் வழியை கற்றுக் கொடுத்த ஆர்சிபி: இயான் மோர்கன்

SCROLL FOR NEXT