அரியலூா் அருகே டிப்பா் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கல்லங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிவா (25), அஜித்குமாா்(27) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில், கயா்லாபாத் ஆஞ்சநேயா் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பா் லாரி எதிா்பாராதவிதமாக மோதியது. இதில், பலத்த காயமைடந்த இருவரும் அரியலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தொடா்ந்து, மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிவா, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்துகுறித்து கயா்லாபாத் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.