அரியலூர்

அனுமதியின்றி லாரியில் மண் கடத்தி வந்த ஓட்டுநா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றிவந்த ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி சுரங்கத் துறையின் உதவி புவியியாளா் நாகராஜன் தலைமையில், அரியலூா் மாவட்ட சுரங்கத்துறை உதவி ஆய்வாளா் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மாலை ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியே வந்த லாரியை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அதில், விருத்தாசலம் அருகேயுள்ள கூவநல்லூரைச் சோ்ந்த தனசேகரன் (37) உரிய அனுமதியின்றி 3 யூனிட் மண் ஏற்றிவந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், தனசேகரனையும் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து தனசேகரனைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT