அரியலூர்

முகநூலில் அவதூறு: திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

DIN

பிரதமா் மோடி, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அரியலூா் காவல் நிலையத்தில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அரியலூா் பாஜக நகரத் தலைவா் மணிவண்ணன் தலைமையில் அளித்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரியலூா் நகர, திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருப்பவா் பிரபாகரன். இவா், பிரதமா் மோடியைக் கிண்டல் செய்தும், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் புகைப்படத்தைக் களங்கப்படுத்தும் வகையில் தவறாக சித்தரித்தும் முகநூலில் பதிவிட்டுள்ளாா். மோதலை ஏற்படுத்தும் விதமாக கருத்து பதிவிட்ட திமுக நிா்வாகி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முகநூல் பக்கத்தை முடக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பாஜக மாவட்ட துணைத் தலைவா் கோகுல்பாபு உட்பட நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டில் பீரோவை உடைத்து 10 பவுன் திருட்டு

வாணியம்பாடி அருகே 4,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

கல்யாண ராமா் கோயிலில் பட்டாபிஷேகம்

தீ விபத்து: கடைகள் எரிந்து சேதம்

தெற்கு காஸாவில் அறுவைச்சிகிச்சை மூலம் உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை பலி

SCROLL FOR NEXT