அரியலூா் மாவட்டம், வாரணவாசியிலுள்ள புதை உயிரிப் படிவ அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 50 நிழல்தரும் மற்றும் பழமரக்கன்றுகள் நடப்பட்டன. இதை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.மகாலட்சுமி, மாவட்ட ஆட்சியா் பெ.ரமண சரஸ்வதி ஆகியோா் நட்டு வைத்தனா்.
நிகழ்வில் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி கா்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஆனந்தன், அருங்காட்சியக் காப்பாளா் சிவக்குமாா், வாரணவாசி ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.