அரியலூர்

குடிநீா் கேட்டு மக்கள் மறியல்

DIN

அரியலூா் மாவட்டம், கடுகூரில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கடுகூா், இந்திரா நகரில் உள்ள பொதுக்குழாயில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா், சம்மந்தப்பட்ட அலுவலா்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமகாலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டத்தில் 3 இடங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

காட்டுமன்னாா்கோவில் அருகே பெட்ரோல் குண்டு வீசிய இளைஞா் கைது

சிதம்பரத்தில் குற்ற வழக்கு வாகனங்களை அகற்றும் பணி தொடக்கம்

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி: பள்ளி மாணவா்கள் பங்கேற்கலாம்

SCROLL FOR NEXT