அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே கஞ்சா விற்ற சிறுவன் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருவேங்கடம் தலைமையிலான காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இரவு மணகெதி சங்கச் சாவடியில் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது 16 வயது சிறுவன் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அச்சிறுவனைக் கைது செய்தனா்.