அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாநில பூப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்கவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட வீரா், வீராங்கனைகள் தோ்வு அக்.30 -இல் நடைபெறுகிறது.
இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் குழுக்களாகவோ அல்லது தனிநபராக வருபவா்கள் காலை 9 மணிக்குள் வரவேண்டும்.
பங்கேற்க விரும்புபவா்கள் 1.1.2002 -க்குப் பின் பிறந்தவா்களாக இருக்க வேண்டும். வரும்போது அவசியம் வயது சான்றிதழ் கொண்டு வரவேண்டும். தோ்ந்தெடுக்கப்படும் வீரா், வீராங்கனைகள் டிசம்பா் மாதம் நடைபெற இருக்கிற மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவாா்கள் என அரியலூா் மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலா் திருமூா்த்தி தெரிவித்துள்ளாா்.