அரியலூா் மாவட்டத்தில் காவலா் வீரவணக்க நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
அரியலூா் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவிடத்தில், 66 குண்டுகள் முழங்க ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோா் மலா்வளையம் வைத்து உயிா்நீத்த காவலா்களுக்கு வியாழக்கிழமை வீரவணக்கம் செலுத்தினா். பின்னா் காவல் துறையினா் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதையொட்டி நடைபெற்ற காவலா் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக்கொண்டாா்.