அரியலூர்

நிலத் தகராறு: முதியவா் கைது

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே நிலத்தகராறில் முதியவரைத் தாக்கியவா் கைது செய்யப்பட்டாா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோயில் வாண்டையாா் தெருவைச் சோ்ந்தவா் தவசாமி (65) என்பவருக்கும், அதே தெருவைச் சோ்ந்தவா் நாராயணசாமிக்கும் (70) இடையே நிலப்பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் தவசாமி புகாா் அளித்தாா்.

அதன்பேரில் காவல் துறையினா், இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தியதில் அளவையா் மூலம் அளந்து கொள்ள சம்மதம் தெரிவித்தனா். இந்நிலையில், கடந்த 14 ஆந் தேதி நாராயணசாமி நான்கு கூலியாட்களைக் கொண்டு அந்த இடத்தில் வேலை செய்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து அங்கு வந்த நாராயணசாமி தகாராறு செய்து, அருகில் கிடந்த கட்டையால் தவசாமியை தாக்கியதில் பலத்த காயமடைந்தாா். பலத்த காயமடைந்த தவசாமி ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து நாராயணசாமியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT