அரியலூா் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள இரும்புலிக்குறிச்சியில் குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இரும்புலிக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் வேல்முருகன்-சத்யா. இத்தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் விரக்தியில் இருந்த சத்யா, தன் வீட்டின் அருகிலுள்ள முந்திரி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டாா்.
இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.