அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மகளைப் பாலியல் பலாத்காரம் செய்தவா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறை அருகேயுள்ள இலங்கைச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் (43). வெல்டிங் வேலை செய்து வரும் இவா், கடந்த அக்டோபா் மாதம் தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாா். சிறுமியன் தாய் அளித்த புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் சுப்ரமணியனைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில், சுப்பிரமணியனை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்குமாறு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்டக் காவல் துறையினா் வழங்கினா்.