அரியலூா் மாவட்டத்தில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாட்டின காளைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அரசின் அனுமதி பெற்று நடைபெற்று வருகின்றன.
கால்நடை வளா்ப்போா்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் தங்களது காளைகள், நாட்டின காளைகள் என்பதற்கு அரசு கால்நடைமருத்துவா் மூலமாக மருத்துவச் சான்றிதழ் பெறவேண்டும்.
சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவின்படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் முற்றிலும் நாட்டின காளைகளாக இருக்க வேண்டும். கலப்பின மற்றும் உயர்ரக காளைகள் பங்கேற்க அனமதிக்கப்படமாட்டாது.