அரியலூர்

நன்னீா் இறால் வளா்க்க ரூ. 25 ஆயிரம் மானியம்

DIN

அரியலூா் மாவட்ட விவசாயிகள் பண்ணைக் குட்டைகளில் பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்க்க விருப்புபவா்களுக்கு 40 சதவீத மானியத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய வேளான் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 1,000 சதுர மீட்டா் பரப்பளவில் பண்ணைக்குட்டைகள் அமைத்துள்ள விவசாயிகள் பண்ணைக்குட்டைகளை புனரமைக்கவும், கூட்டுமீன் வளா்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீா் இறால் வளா்ப்பை மேற்கொள்ளும் விதமாக ஆகும் உள்ளீட்டு செலவினம் மொத்தம் ரூ.62,500-க்கு 40 சதவீதம் மானியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அரியலூா் மாவட்ட உதவி இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆட்சியரக வளாகம், அரியலூா், தொலைபேசி 04329 -228699 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT