அரியலூா் அம்பேத்கா் சிலை முன்பு இந்திய மருத்துவக் கழகம் சாா்பில் கரோனா தொற்று விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவக் கழகத் தலைவா் எழில்நிலவன் தலைமை வகித்தாா். சங்கச் செயலரும், மருத்துவருமான நாகராஜன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்றாா். தொடா்ந்து, உடையாா்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவா் இளவரசன், முன்னாள் அரசு மருத்துவா் சிவக்குமாா், பல் மருத்துவா் ஸ்ரீராம்ராஜ் மற்றும் செவிலியா்கள் கலந்து கொண்டு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.