அரியலூர்

அரியலூா் அருகே ஆலங்கட்டி மழை

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.

திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து வானில் மேகமூட்டம் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தூறல் விழுந்து வந்தது. இந்நிலையில், மாலை 5 மணியளவில் தூத்தூா், கோவிலூா், கோமான், குருவாடி, ஏலாக்குறிச்சி, ஆண்டிபட்டாக்காடு, விழுப்பனங்குறிச்சி, திருமானூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதில், கோவிலூா் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட இளைஞா்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடினா். இந்த ஆலங்கட்டி மழை அந்தக் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

SCROLL FOR NEXT