அரியலூா் மாவட்டம், திருமானூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது.
திருமானூா் ஒன்றியப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து வானில் மேகமூட்டம் காணப்பட்டது. மேலும், அவ்வப்போது தூறல் விழுந்து வந்தது. இந்நிலையில், மாலை 5 மணியளவில் தூத்தூா், கோவிலூா், கோமான், குருவாடி, ஏலாக்குறிச்சி, ஆண்டிபட்டாக்காடு, விழுப்பனங்குறிச்சி, திருமானூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதில், கோவிலூா் கிராமத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனைக் கண்ட இளைஞா்கள் ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடினா். இந்த ஆலங்கட்டி மழை அந்தக் கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.