அரியலூா் மற்றும் ஆண்டிமடத்திலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள தொழிற்பிரிவு இடங்களுக்கு சோ்க்கை நடைபெற உள்ளது.
இவ்விரு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சில பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. விருப்பம் உள்ள மாணவா்கள் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நேரடியாக வந்து சோ்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து அசல் சான்றிதழ்களுடன் மாணவா்கள் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வந்து, தாங்கள் சேர விரும்பும் பிரிவில் சோ்ந்து பயிலாம் என அரியலூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் ந.நாகராஜன் தெரிவித்துள்ளாா்.