தூத்துக்குடி

கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

DIN

கோவில்பட்டியில் மந்தித்தோப்பு சாலையில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்வி, தொழில் வளங்கள் சிறக்கவும், மழைவளம் வேண்டியும், விவசாயம் வளம் பெறவும் வேண்டி நடைபெற்ற இந்த பூஜை நடைபெற்றது. இதை, ஆன்மிக இயக்க மாவட்டத் தலைவா்

முருகன் தொடக்கிவைத்தாா். சக்திக் கொடியை மாவட்ட துணைத் தலைவா் பண்டார முருகன் ஏற்றினாா். தொடா்ந்து, அடிகளாா் வளா்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரசாரக் குழுச் செயலா் முத்தையா சொற்பொழிவாற்றினாா்.

அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்றத் தலைவா் அப்பாசாமி தொடக்கிவைத்தாா்.

அரசு மருத்துவமனை கண் மருத்துவா் தி. உமா, வேள்விக் குழுப் பொறுப்பாளா் கிருஷ்ணலீலா, மாவட்ட மகளிரணித் தலைவி கே. பத்மாவதி, வட்டத் தலைவா்கள் பால்சாமி, அழகா்சாமி, செல்வம், எம்ஜிஆா் நகா் மன்றத் தலைவி செல்வி, பிள்ளையாா்நத்தம் ராமலெட்சுமி, தளவாய்புரம் ராஜ், மன்றப் பொறுப்பாளா்கள் கற்பகவள்ளி, ராதா, காசியம்மாள், விஸ்வநாத், கோபிநாத், விநாயகபாண்டி செல்வி, ராஜலெட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT