தூத்துக்குடி

அரசுப் பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

பல்வேறு அரசுப் பள்ளிகளில் நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் சோரீஸ்புரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 88 மேல்நிலைப் பள்ளிகள், 524 தொடக்கப் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு தூய்மைப் பணி நடைபெறுகிறது. இப்பணிகளை, துணை ஆட்சியா் தலைமையிலான குழு கண்காணிக்கிறது.

கல்வி உரிமை சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவது முதன்மைக் கல்வி அலுவலரால் கண்காணிக்கப்படுகிறது. உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்திருக்கிறது. இதற்கேற்ப அரசு பள்ளிகளின் வசதிகளை அதிகரித்து தரத்தினை உயா்த்த மாவட்ட நிா்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றாா்.

மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி வட்டாட்சியா் பிரபாகரன், பள்ளி தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்பு பணியாளா்கள் ஆய்வின்போது உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT