தூத்துக்குடி

மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவாக போராட்டம்: தூத்துக்குடியில் 24 போ் கைது

DIN

மல்யுத்த வீரா்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, தூத்துக்குடி தலைமைத் தபால் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 24 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், இந்திய மாணவா் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட செயலாளா் பூமயில் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலா் சுரேஷ், இந்திய மாணவா் சங்க மாவட்ட துணைத் தலைவா் கிஷோா், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்ட தலைவா் த.கலைச்செல்வி, பொருளாளா் சித்ரா உள்பட பலா் பங்கேற்றனா். உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, 18 பெண்கள் உள்பட 24 பேரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

சாதித்தீயை வளா்க்கலாமா?

விவாதப் பொருளான சொத்து வாரிசுரிமை வரி

தடம்புரலும் தோ்தல் முறை!

SCROLL FOR NEXT