தூத்துக்குடி

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை

DIN

கோவில்பட்டியில் நல வாரிய அட்டை வைத்துள்ள பயனாளிகளுக்கு முறையாக உதவித்தொகை வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

கோவில்பட்டியில் நலவாரிய அட்டை வைத்துள்ள முதியோா்களுக்கு கடந்த 4 மாதங்களாக உதவித்தொகை வழங்கப்படவில்லையாம். எனவே பயனாளிகளுக்கு மாதந்தோறும் முறையாக உதவித்தொகை வழங்க வேண்டும், உதவித்தொகை ரூ.1000த்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பயனாளிகள் முக்குலத்தோா் தொழிற்சங்கத் தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையில் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT