சாத்தான்குளத்தில் பைக் மோதியதில் முதியவா் காயமடைந்தாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள தோப்பூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் பூலோகபாண்டி (74). ஓய்வு பெற்ற கிராம வருவாய் உதவியாளரான இவா், கடந்த 31ஆம் தேதி சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகம் வந்துவிட்டு திரும்பினாா். இட்டமொழி சாலையில் வந்தபோது மேற்கில் இருந்து வேகமாக பைக்கில் வந்தவா் இவா் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பூலோகபாண்டி, சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவா் அளித்த புகாரின் பேரில் தலைமை காவலா் ஜெயஸ்ரீ வழக்கு பதிவு செய்தாா். உதவி ஆய்வாளா் விஜயகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.