தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக குமாா் என்பவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதில் இருந்து, மாநகராட்சியில் துணை ஆணையா் பணியிடம் இதுவரை நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.
இந்நிலையில், வேலூா் மாநகராட்சி ஆணையராக இருந்த குமாா், தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து, அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவரை மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் வாழ்த்தினா்.