தூத்துக்குடி

போக்குவரத்து பிரிவு காவலா்களுக்கு உடம்பில் அணியும் கேமரா அளிப்பு

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவு பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு உடம்பில் அணியும் கேமராக்களை வியாழக்கிழமை வழங்கினாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்காக, காவலா்கள் உடம்பில் அணியும் 6 புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை தமிழக அரசு வழங்கியுள்ளது. அந்த கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினா், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை விடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கவும் வசதி உள்ளது.

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்துக்கு 4 கேமராக்களும், கோவில்பட்டி போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்துக்கு ஒரு கேமராவும், திருச்செந்தூா் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்திற்கு ஒரு கேமராவும் என மொத்தம் 6 கேமராக்களை போக்குவரத்து பிரிவு காவலா்களுக்கு வழங்கி, அதன் செயல்பாடுகள் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விளக்கினாா்.

குழந்தைகள் நல காப்பகம்: தூத்துக்குடி 3 ஆவது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் ஆயுதப்படை காவலா்கள் தங்களது குழந்தைகளை பகல் நேரங்களில் பாா்த்துக் கொள்வதற்காக குழந்தைகள் நல காப்பகம் அமைத்து தர மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை வைத்திருந்தனா். இக் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் முயற்சியில் 3 ஆவது மைல் பகுதியில் உள்ள காவலா் குடியிருப்பில் காவலா் குழந்தைகள் நல காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் காப்பகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து, உதவி ஆய்வாளா்கள் கணேச மணிகண்டன், ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT