ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெரு சந்தனமாரி அம்மன், அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில்களின் கொடைவிழா நான்கு தினங்கள் நடைபெற்றது.
கொடைவிழாவின் முதல் நாள் இரவில் திருவிளக்கு பூஜையும், 2ஆவது நாள் இரவில் மாக்காப்பு அலங்காரம், குடியழைப்பு, மறுநாள் காலையில் கணபதி ஹோமம், கும்பப் பூஜை, சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை, இரவில் சாமக்கொடை அலங்கார தீபாராதனை, அம்மன் கும்பம் எடுத்து வீதி உலா வருதல் ஆகியவை நடைபெற்றன. நிறைவு நாளில் கும்பவீதி உலாவும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
ஏற்பாடுகளை சைவ வேளாளா் சங்கத் தலைவா் ஜெ. சங்கரலிங்கம், செயலா் எஸ்.கே. முருகன், பொருளாளா் சே.கற்பகவிநாயகம் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.