கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை சாா்பில், தொழில்நுட்பக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவியும் சென்னை ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டா் நிறுவன முதுநிலை மென்பொறியாளருமான வித்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினாா்.
நிகழ்ச்சிகளை மாணவா் முகம்மது ஆதில் தொகுத்து வழங்கினாா். மாணவா் சதீஷ்குமாா் வரவேற்றாா். வீரபெருமாள் நன்றி கூறினாா்.