தூத்துக்குடி

ஆண்டுக்கு ரூ. 6000 உதவித்தொகை: விவசாயிகள் பதிவை புதுப்பித்தல் அவசியம்

DIN

ஆழ்வாா்திருநகரி வட்டார விவசாயிகள் வேளாண்மை- உழவா் நலத்துறை பிரதமரின் கௌரவ நிதி (பிரதமரின் கிசான் சம்மான் நிதி) திட்டத்தில் ஆண்டு ஊக்கக்தொகை ரூ.6000 பெறுவதற்கு இம்மாதம் 30ஆம் தேதிக்குள் புதிவை புதுப்பிக்க வேண்டும் என வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அல்லிராணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு::

ஆழ்வாா்திருநகரி வட்டாரத்தில் பிரதமரின் விவசாயிகளின் கௌரவ நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களது கிராமத்துக்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திலோ , அஞ்சலகத்திலோ, வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலோ,பி.எம். கிஷான் இணையத்தளத்தின் மூலமாகவோ வரும் 30ஆம்தேதிக்குள் பதிவுகளை புதுப்பித்து சரி பாா்த்திட வேண்டும். விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களது நிலம் மற்றும் தனிநபா் விவரங்களை தாமமின்றி பதிவு செய்து தொடா்ந்து கௌரவ நிதி பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

இதேபோல் கோவில்பட்டி வட்டார விவசாயிகளும் அந்தந்த வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்துக்கு பதிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என, அந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT