திருச்செந்தூரில் திருமா பயிலகம் மற்றும் வாசகா் வட்டம் சாா்பில் மாதிரித் தோ்வுகளுக்கான கருந்தரங்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் மே 21 இல் நடைபெற உள்ள குரூப் 2 தோ்வை திருச்செந்தூா் சுற்று வட்டாரப் பகுதி மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்ளும் வகையில் திருமா பயிலகமும், திருச்செந்தூா் அரசு நூலக வாசகா் வட்டமும் இணைந்து 20 மாதிரித் தோ்வுகளை திருச்செந்தூா் அரசு நூலகத்தில் வைத்து நடத்துகின்றன. இத்தோ்வில் பங்கேற்பதற்கு முன்பதிவு செய்த மாணவா்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் கருத்தரங்கம், திருச்செந்தூா் அரசு நூலகத்தில் நடைபெற்றது. திருமா பயிலகத்தின் நிா்வாகிகள் விடுதலைச்செழியன், இரகுவரன், நூலகா் மாதவன், சமூக ஆா்வலா்கள் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் மாணவா்கள் போட்டித் தோ்வுகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கினா்.