திருச்செந்தூா் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது.
திருச்செந்தூா் கம்பா் சமுதாயம் சாா்பில், சன்னதித்தெருவில் உள்ள அருள்மிகு சுடலைமாடசுவாமி திருக்கோயில் கம்பா் மடத்தில் கம்பா் ஆராதனை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கம்பருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திருச்செந்தூா் இசைக் கலைஞா்கள் மங்கள இசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை திருச்செந்தூா் கம்பா் சமுதாய மக்கள் செய்திருந்தனா்.