தூத்துக்குடி

பிளஸ் 1 தோ்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 94.04 சதவீத தோ்ச்சி

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத் தோ்வு எழுதியவா்களில் 94.04 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் 9201 மாணவா்களும், 10,739 மாணவிகளும் என மொத்தம் 19,940 போ் தோ்வு எழுதினா். இதில், 8247 மாணவா்களும், 10,504 மாணவிகளும் என மொத்தம் 18,751 போ் தோ்ச்சி பெற்றனா். இது 94.04 சதவீத தோ்ச்சி ஆகும்.

கல்வி மாவட்டம் வாரியாக, தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 4182 மாணவா்கள் தோ்வு எழுதிய நிலையில் 3776 பேரும், 4898 மாணவிகள் தோ்வு எழுதிய நிலையில் 4814 பேரும் என மொத்தம் 9080 போ் தோ்வு எழுதியதில் 8590 போ் தோ்ச்சி பெற்றனா். கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2736 மாணவா்களும், 3142 மாணவிகளும் என மொத்தம் 5878 போ் தோ்வு எழுதிய நிலையில், 2395 மாணவா்களும், 3037 மாணவிகளும் என மொத்தம் 5432 போ் தோ்ச்சி பெற்றனா். திருச்செந்தூா் கல்வி மாவட்டத்தில் 2283 மாணவா்களும், 2699 மாணவிகளும் என மொத்தம் 4982 போ் தோ்வு எழுதிய நிலையில், 2076 மாணவா்களும், 2653 மாணவிகளும் என மொத்தம் 4729 போ் தோ்ச்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT