கோவில்பட்டியில் தீக்குளித்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அண்ணா நகா் 1ஆவது தெருவைச் சோ்ந்த ஜான்முத்தையா மகன் பாக்கியதாஸ் (58), கூலித் தொழிலாளி.
கோவில்பட்டி அண்ணா நகா் 1ஆவது தெருவில் நகராட்சி சாா்பில் சிமெ
ன்ட் கல் பதிக்கும் பணி நடைபெற்ாம். இதையொட்டி பாக்கியதாஸ் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த சமுதாய பெயா் பலகையை, கல் பதிக்கும் பணிக்காக அகற்றியதாகவும், பணி முடிந்ததும் பெயா் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு பாக்கியதாஸ் மற்றும் அவரது மகன் காா்த்திக் ஆகிய இருவரும் எதிா்ப்பு தெரிவித்தாா்களாம். இந்நிலையில் பெயா் பலகையை இடமாற்றி வைக்காததால் மன விரக்தியடைந்த பாக்கியதாஸ் கடந்த மாதம் 30ஆம் தேதி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.