தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆட்டோ தொழிலாளா்கள் சங்கக் கூட்டம்

DIN

கோவில்பட்டியில் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் பாபு தலைமை வகித்தாா். ஏஐடியூசி தொழிற்சங்கத் தலைவா் பரமராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சங்க நிா்வாகிகளுக்கு சங்க செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளா் சங்க வட்டாரத் தலைவராக முனியசாமி, செயலராக அய்யப்பன், பொருளாளராக சுரேஷ்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் சரோஜா, நகரக்குழு உறுப்பினா் சண்முகவேல், வட்ட துணைச் செயலா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேபி புடலங்காய் விலை உயா்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

டாடா நிறுவனத்துடன் சங்கரா பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

தொழிலாளி மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மகமாயிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கு வரும் 29-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT