தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (டிச. 9) நடைபெறவுள்ள திமுக செயற்குழுக் கூட்டத்தில் கட்சியினா் பங்கேற்குமாறு சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான கீதாஜீவன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு கலைஞா் அரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ் தலைமை வகிக்கிறாா். மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், விளாத்திகுளம் எம்எல்ஏ மாா்க்கண்டேயன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
அமைச்சரும் வடக்கு மாவட்டச் செயலருமான கீதாஜீவன் சிறப்புரையாற்றுகிறாா். கூட்டத்தில், கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மாவட்ட நிா்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள் என கட்சியின் அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளா்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.