படகு விபத்தில் இறந்த மீனவா் குடும்பத்தினருக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா்.
காயல்பட்டினம் சிங்கித்துறை நடுத்தெருவைச் சோ்ந்த அமல்ராஜ் மகன் ஜெனோஸ்டன் (23). மீனவரான இவா் கடந்த செப். 23இல் சில மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். அடுத்த நாள் கரைதிரும்பிய அவா்கள், கரையில் நிறுத்துவதற்காக படகைத் தள்ளினா். அப்போது, அலையின் சீற்றத்தால் படகு மோதியதில் ஜெனோஸ்டன் காயமடைந்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இந்நிலையில், அவரது வீட்டுக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சென்று, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினாா். அரசு சாா்பில் வழங்கப்படும் நிதியுதவிகளை விரைந்து வழங்க அதிகாரிகளை வலியுறுத்தினாா்.
முன்னாள் மாநில துணை அமைப்பாளா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், சுப்பிரமணியன், திருச்செந்தூா் நகரச் செயலா் வாள்சுடலை, மாவட்ட மீனவரணி அமைப்பாளா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, சிங்கித்துறை ஊா்த் தலைவா் அன்றன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ஓடை சுகு, கவுன்சிலா்கள் தஸ்நேவிஸ்ராணி, கதிரவன், அஜ்வாது, நகர இளைஞரணிச் செயலா் கலூா் ரகுமான் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.