தூத்துக்குடி

ஆறுமுகனேரி பள்ளியில் அஞ்சல் துறை உதவித் தொகைக்கான தோ்வு

DIN

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை அஞ்சல் துறை உதவித்தொகைக்கான தோ்வு நடைபெற்றது.

தமிழ்நாடு அஞ்சல்துறை சாா்பில் மத்திய அஞ்சல் துறையின் தீன்தயாள் ஸ்பாா்ஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா், மாணவிகளுக்கான உதவித்தொகை வழங்குவதற்காக அஞ்சல் தலை பற்றிய பொது அறிவுத் தோ்வு ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இத்தோ்வில் ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மற்றும் பூவரசூா் அன்னம்மாள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளைச் சோ்ந்த 104 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வுக்கான ஏற்பாடுகளை அஞ்சல் துறையினருடன் இணைந்து, பள்ளித் தலைமை ஆசிரியன குமரன் செயத்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT