கோவில்பட்டி- பசுவந்தனை சாலையில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கடந்த மாதம் 23ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
கீழபாண்டவா்மங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்த நல்லசிவம் மகன் நிஷாந்த் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த மாதம் 23ஆம் தேதி பைக்கில் சென்றாராம். பசுவந்தனை சாலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் அருகே இவரது பைக்கும், ராஜீவ் நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் ஓட்டிவந்த பைக்கும் மோதினவாம். இதில் இருவரும் காயமடைந்தனா். நிஷாந்த் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை (நவ. 30) உயிரிழந்தாா்.
கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.