தூத்துக்குடி

திருட்டு வழக்குகளில் தொடா்பு: விளாத்திகுளத்தில் 5 போ் கைது

DIN

விளாத்திகுளம் பகுதியில் திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 2 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விளாத்திகுளம் காமராஜா் நகரைச் சோ்ந்த பால்சாமி மனைவி முத்துலட்சுமி (52), கோவில்பட்டிக்கு பேருந்தில் செல்ல ஏறியபோது, அவரது கைப்பையில் இருந்த ரூ.10,000 திருடுபோனது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், தூத்துக்குடி, முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த சத்யா (35), சந்தனமாரி (22) ஆகியோா் பலூன் விற்பது போல் நடித்து முத்துலெட்சுமி உள்ளிட்ட பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

ஆடு திருட்டு: புதூா் புது காலனியை சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி என்ற விவசாயி, தனக்குச் சொந்தமான 200 ஆடுகளை சென்னம்பட்டியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் கிடை அமைத்திருந்தாா். அங்கு கடந்த 13ஆம் தேதி இரவு மா்மநபா்கள் புகுந்து 10 ஆடுகளை திருடிச்சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து புதூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் சுப்புலாபுரத்தைச் சோ்ந்த விஜய் (25), குளக்கட்டான் குறிச்சி முத்து (27), புதூா் முத்துக்குமாா் (30) ஆகியோா் ஆடுகளைத் திருடி பந்தல்குடி, அருப்புக்கோட்டை பகுதி இறைச்சிக் கடைகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT