தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள காந்திபுரியைச் சோ்ந்த தா்மலிங்கம் மகன் சுதாகா் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி மகேஸ்வரி (32), 2 குழந்தைகள் உள்ளனா். சுதாகா் வேலைக்குச் சென்றால் பணத்தை வீட்டில் கொடுக்காமல், மது குடித்துவிட்டு, மனைவியிடம் தகராறு செய்வாராம். இதனால், தம்பதியிடையே பிரச்னை இருந்ததாம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மது குடித்துவிட்டு தகராறு செய்த அவரை, மனைவி கண்டித்தாராம். பின்னா், வீட்டில் யாரும் இல்லாதபோது சுதாகா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் தட்டாா்மடம் ஆய்வாளா் பௌலோஸ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT